தன்மகளை எச்சரித்த ஆசிரியையை முழங்காலில் நிறுத்திய மாகாணசபை உறுப்பினர் கைது.



ட மேல் மாகாண சபை உறுப்பினரான ஆனந்த சரத்குமார, நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமேல் மாகாண சபை உறுப்பினரான அனந்த சரத் குமார, பாடசாலை ஆசிரியை ஒருவரை நேற்று முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கியுள்ளார்.

குறித்த ஆசிரியை, பாடசாலை மாணவி ஒருவருக்கு சீருடை தொடர்பாக எச்சரித்துள்ளார். இதுகுறித்து குறித்த மாணவி அவரது தந்தையான மாகாண சபை உறுப்பினரான அனந்த சரத்குமாரவிடம் கூறியுள்ளார்.

இனையடுத்து பாடசாலைக்குச் சென்ற மாகாண சபை உறுப்பினர், குறித்த ஆசிரியையை பாடசாலைக்குள்ளேயே முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கியுள்ளார் என்று தெரிவிக்ப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஆசிரியை நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :