இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கொள்ளையில் ஈடுபட்ட ஏழுபேர் கைது.

ரத்தினக்கல் மற்றும் தங்காபரண கொள்ளையில் ஈடுபட்ட ஏழு சந்தேகநபர்கள் பேருவலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதான சந்தேகநபர்கள் வசமிருந்து ஐந்தரை இலட்சம் பெறுமதியான இரத்தினக் கற்கள் ஐந்து, இரண்டு இலட்சம் பெறுமதியான 10 கையடக்கத் தொலைபேசிகள், ரூ.8,65,000 பெறுமதியான தங்காபரணங்கள் மற்றும் பல்வேறு சிம்காடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பேருவல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (19) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :