நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார் நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலி.

வர் இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருப்பார் என வெளிவிவகார செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ ஆகியோருடன் நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் உச்சி மாநாடு என்பன தொடர்பிலும் மரே மெக்கலி இந்த விஜயத்தின்போது கவனம் செலுத்தவுள்ளார்.

இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவே நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வதாக வெளிவிவகார செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :