அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்து மீட்பு பணியில் அவுஸ்திரேலிய படையினர்.

வுஸ்திரேலியாவுக்கு தஞ்சக் கோரிக்கையாளர்களைச் ஏற்றிச் சென்ற மற்றுமொரு படகு விபத்துக்குள்ளாகி உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொக்கோஸ் தீவுக்கு வடக்காக 257 கடல் மைல் தூரத்தில் கடந்த திங்கட்கிழமை குறித்த படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு மீட்புப் பணிகளுக்காக அவுஸ்திரேலிய அரசு கடற்படை படகுகளையும் ஹெலிக்கொப்டர்களையும் அனுப்பி வைத்துள்ளதுடன் இரண்டு விமானங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த படகில் பயணித்தவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதால் அனர்த்தத்தில் சிக்கியோர் இலங்கையர்களாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுவரை எவருமே காப்பாற்றப்பட்டதாகவோ, சடலங்கள் மீட்கப்பட்டதாகவோ தகவல்கள் வெளிவரவில்லை.

கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது விபத்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :