சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் யார் வெற்றி பெறுவது..?

சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.

கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை அணி தற்போது கார்டிப் மைதானத்தில் நாளை இந்தியாவுடன் மோதுகிறது.

இது குறித்து ஜெயவர்த்தன கூறுகையில்,அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு மிகவும் ஆவலாக உள்ளோம். பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோற்றுப் போனது குறித்து எவ்வித கவலையும் இல்லை.

இது முக்கியமான அரையிறுதி ஆட்டமாகும். இதில் சிறப்பாக விளையாடுவதில் மட்டுமே எங்கள் கவனத்தை செலுத்தவுள்ளோம்.

இந்திய அணி மிகச் சிறப்பான அணியாகும் தற்போது அபாரமாக விளையாடி வருகிறது. அவர்களின் துடுப்பாட்ட வரிசை மிக வலுவானதாக உள்ளதால் அதை கவனத்தில் வைத்தே விளையாடுவோம்.
ஒரு நாள் போட்டிகளில் 11,000ஓட்டங்கள் எடுத்தது குறித்து திருப்தி அடைகிறேன். ஆனால் அதனை பெரிதாக நினைக்காமல், மீண்டும் அணியை எவ்வாறு வலுவுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

அரையிறுதி சுற்றோ, இறுதிச்சுற்றோ எல்லா ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஒத்துழைத்து விளையாடினால் இலங்கை அணிக்கு வெற்றி நிச்சயம் என்று கூறினார்.

மேலும், இதுவரை நடந்த 394 ஒரு நாள் போட்டிகளில் ஜெயவர்த்தன 11,002 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :