இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு ஏழு வருட சிறைத்தண்டனை

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு ஏழு வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

76 வயதான சில்வியோ பெர்லுஸ்கோனி முன்பு பிரதமராக இருந்தபோது, 2010–ம் ஆண்டில் இரவு விடுதியில் நடனமாடும் 17 வயது வயது குறைந்த பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாகவும், ஒரு முறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்த பெண்ணை பொலிஸ் காவலில் இருந்து மீட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் இது தொடர்பாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெர்லுஸ்கோனிக்கு நேற்று 7 ஆண்டு சிறை தண்டனை விதித்ததோடு, அவர் அரசு பதவி வகிக்க தடை விதித்தும் தீர்ப்பு கூறினார்கள். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவருக்கு நீதிபதிகள் அனுமதி அளித்து உள்ளனர்.

இத்தாலியில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறையில் குறைந்த காலம் தண்டனை அனுபவிக்க அந்த நாட்டு சட்டம் வகை செய்கிறது. அதன்படி பெர்லுஸ்கோனி மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அவருக்கான தண்டனை மிகவும் குறைக்கப்படும் என்று கருதப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :