மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, பொத்துவில் வரையான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுவதால் மீனவர்கள்
மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையான கடல் மற்றும் கடற் கரையோரப் பிரதேசங்களிலும் சீரற்ற காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களில் மணித்தியாலயத்திற்கு 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதன் காரணமாக மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலில் கூடிய மழை வீழ்ச்சிகளுடன் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இதேவேளை புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையான கடல் மற்றும் கடற் கரையோரப் பிரதேசங்களிலும் சீரற்ற காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களில் மணித்தியாலயத்திற்கு 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதன் காரணமாக மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலில் கூடிய மழை வீழ்ச்சிகளுடன் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இதேவேளை புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment