மதுபோதையில் நாயைக் கடித்த யாழ் இளைஞன் வைத்தியசாலையில் -

யாழ்ப்பாணம், திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று (26) காலை மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி வீதியூடாக சென்று கொண்டிருந்தவேளை இளைஞனை நாய் துரத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த இளைஞன் துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கிச் சென்று நாயைக் கடித்துக் குதறியுள்ளார்.

இதனால் நாய்க்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதோடு குறித்த இளைஞரும் காயமடைந்துள்ளார்.

இரத்தப் போக்கு கரணமாக நாயைக் கடித்த இளைஞன் மயக்கமடைந்துள்ளார்.

அவ் இளைஞன் பிரதேசவாசிகளின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

26 வயதான குறித்த இளைஞன் யாழ். திருநகர் இராஜேந்திரா வீதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :