13வது திருத்த சட்டத்தில் திருத்தம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஆதரவா-முபாறக் மஜீட்

( நஜாத் )

13வது திருத்த சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டமைக்கு முஸ்லிம் கட்சிகள்
ஆதரவளித்தமை சிறுபான்மை மக்களுக்குச்செய்த மிகப்பெரிய குற்றமாகும் என முஸ்லிம்மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இரண்டு மாகாணங்களை இணைப்பது விடயத்தில் அமைச்சரவை கூட்டத்தில் திருத்தம்மேற்கொள்ள முஸ்லிம் கட்சிகளின் அமைச்சர்கள் ஆதரவளித்தமை தொடர்பாககேட்கப்பட்ட போதே இவ்வாறு அவர் கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது,

13வது திருத்த சட்டத்தில் எத்தகைய திருத்தத்துக்கும் ஆதரவளிக்கமாட்டோம் எனவீறாப்புடன் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கடைசியில்அமைச்சரவையில் மௌனமாகி அதற்கு ஆதரவளித்தமை எதிர் பார்க்கப்பட்ட ஒன்றுதான்.முதலில் இதனை எதிர்த்த ஹக்கீம் பின்னர் அமைதியாகி விட்டார் என கெஹலியரம்புக்வெல உறுதிப்படுத்தியுள்ளார்.

 அமைச்சரவையில் ஆவேசமாக பேசினார் எனமுஸ்லிம்களுக்கு சொல்லி முஸ்லிம் மக்களை உஷார் மடையர்களாக்கி விட்டுகடைசியில் அமைச்சரவை தீர்மானத்துக்கு ஆதவளித்ததன் மூலம் அரசுக்கான தனதுவிசுவாசத்தையும் ஹக்கீம் காட்டியுள்ளார்.

அதே போல் இத்தகைய திருத்தத்துக்கு அதாவுள்ளாவும், ரிசாதும் ஆதரவளிப்பார்கள்என்பதும் நூறு வீதம் எதிர் பார்த்த ஒன்றுதான். அவ்விருவரும் அரசாங்கத்தைஎ
திர்த்ததாக வரலாறு இல்லை. எம்மைப் பொறுத்த வரை சிறுபான்மை மக்களின் நலனைகருத்திற்கொண்டு இரண்டு மாகாணங்களையும்இணைக்கும்முதலமைச்சர்களின்அதிகாரம்நீக்கப்பட்டிருந்தால் அது பற்றி சிந்தித்திருக்கலாம்.

 ஆனால் இனவாத கட்சிகளானஜாதிக்க ஹெல உறுமய மற்றும் விமலின் கட்சிகளின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்று
இத்தகைய திருத்தம் கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக்கட்சிகளின்இனவாத செயற்பாடுகளுக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளமையும் அதற்கு முஸ்லிம்கட்சிகளும் தமது அமைச்சுப்பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்காகசரணடைந்துள்ளமையும் மிகப்பெரிய வரலாற்றுக் குற்றமாகும்.

இந்த வெற்றி மேலும் பல சிறுபான்மை மக்களின் உரிமைகளை முஸ்லிம்
கட்சித்தலைவர்களை பதவியில் வைத்துக்கொண்டே நீக்கும் வழியை காட்டியுள்ளது.

ஏற்கனவே தம்புள்ள பள்ளியை இடம் மாற்றவது, ஹலால் நீக்கம் என பல உரிமைகளைமுஸ்லிம்கள் இழந்து நிற்கும் நிலையில் 13வது திருத்தச்சட்டத்தில் திருத்தம்என்ற இடியும் மொத்த சிறுபான்மை மக்கள் தலையில் விழுந்துள்ளது என்றும்குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :