அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவியை துன்புறுத்திய இலங்கையரின் வீசா இரத்து.

வுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் விசாவை இரத்து செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

டி.செல்வராஜா என்ற 21 வயதுடைய இலங்கை இளைஞரின் விசாவே இவ்வாறு இரத்து செய்யப்படவுள்ளது.

பல்கலைக்கழக விடுதியில் வைத்து மாணவி ஒருவரை குறித்த இளைஞர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி மாணவருக்கு பிணை வழங்கினார்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி குறித்த இளைஞன் அங்கு தங்கியிருந்ததாகவும் அவருக்கு தற்காலிக விசா அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :