களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் களனி பிரதேச சபையின் உறுப்பினர் நதிக்க சம்பத் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல அமைச்சர் ஒருவரை வரவேற்பதற்கான வைபவத்தை ஏற்பாடு செய்துக்கொண்டிருந்த போது இரு தரப்பினர்களுக்கு இடையில் சற்றுமுன்னர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போதே இவ்விருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றுமொரு அரசியல்வாதியின் ஆதரவாளர்களுக்கும் களனி பிரதேச சபை தலைவரின் ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment