நுவரெலியாவில் நடைபெறும் மேதின விழாவிற்கு சென்றுக்கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மக்களை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கி பயணித்த பஸ் வண்டியின் மிதி பலகையில்
கோசங்களை எழுப்பியவாரு பயணித்த அவர் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் வைத்து தவறி கீழே
விழுந்து மரணித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் டயகம 1ஆம் பிரிவை சேர்ந்த 35 வயதுடைய ஒருபிள்ளையின் தந்தையான
கருப்பையா காமராஜ் என அக்கரப்பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.
இவர் நுவரெலியா நகரில் இன்று பிற்பகல் நடைபெற உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின்
மேதின கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் சடலம் லிந்துலை அரச வைத்தியசாலையில் இருந்து நுலரெலிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதுடன். அக்கரப்பத்தனை பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மக்களை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கி பயணித்த பஸ் வண்டியின் மிதி பலகையில்
கோசங்களை எழுப்பியவாரு பயணித்த அவர் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் வைத்து தவறி கீழே
விழுந்து மரணித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் டயகம 1ஆம் பிரிவை சேர்ந்த 35 வயதுடைய ஒருபிள்ளையின் தந்தையான
கருப்பையா காமராஜ் என அக்கரப்பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.
இவர் நுவரெலியா நகரில் இன்று பிற்பகல் நடைபெற உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின்
மேதின கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் சடலம் லிந்துலை அரச வைத்தியசாலையில் இருந்து நுலரெலிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதுடன். அக்கரப்பத்தனை பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments :
Post a Comment