ஜனாதிபதி மஹிந்த - ஜப்பான் பிரதிப் பிரதமர் இன்று சந்திப்பு


ப்பானின் பிரதிப் பிரதமர் டரோ அசோ மற்றும் பாராளுமன்ற சிரேஷ்ட உப நிதி அமைச்சர் யுக்கோ ஒபுச்சி ஆகியோர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இக்குழுவினர் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க ஜப்பானின் பிரதிப் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இக்குழுவினர் நாளை (03) இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர்.

இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இவர்கள் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :