இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் எழுதிய இரண்டு கதைகள் ஹிந்தியில் படமாகப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரோஜா படத்தில் மணிரத்னத்தினால் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டவர் ஏ.ஆர்.ரகுமான். அப்படத்தின் வெற்றி காரணமாக, தமிழில் தொடர்ந்து பெரிய அளவில் வெற்றிப் பாடல்களைக் கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்தார்.
அதையடுத்து, ஹாலிவுட்டுக்கும் சென்று ஆஸ்கார் விருது பெற்று இப்போது புகழின் உச்சாணியில் அமர்ந்திருக்கிறார்.
மேலும், பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கியிருந்த ரகுமான், அந்த சமயங்களில் படங்களுக்கு திரைக்கதை எழுதுவது பற்றியும் படித்துள்ளாராம்.
அதை முடித்த கையோடு அங்கிருந்தபோது இரண்டு கதைகளை தயார் பண்ணி விட்டாராம். ஆனால் அவர் சென்னை வந்தபிறகு இந்த கதை எழுதிய விவரம் பற்றியும் சொன்னார்.
இப்போது அந்த கதைகளை ஹிந்தி இயக்குனர் ஒருவரிடம் ரகுமான் கூறியிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. விரைவில் தொடங்கவிருக்கும் அந்த இரண்டு படங்களுக்குமே ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறாராம்.
அதோடு, படம் ஹிந்தியில் தயாரானபோதும், தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட உள்ளதாம்.
ரோஜா படத்தில் மணிரத்னத்தினால் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டவர் ஏ.ஆர்.ரகுமான். அப்படத்தின் வெற்றி காரணமாக, தமிழில் தொடர்ந்து பெரிய அளவில் வெற்றிப் பாடல்களைக் கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்தார்.
அதையடுத்து, ஹாலிவுட்டுக்கும் சென்று ஆஸ்கார் விருது பெற்று இப்போது புகழின் உச்சாணியில் அமர்ந்திருக்கிறார்.
மேலும், பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கியிருந்த ரகுமான், அந்த சமயங்களில் படங்களுக்கு திரைக்கதை எழுதுவது பற்றியும் படித்துள்ளாராம்.
அதை முடித்த கையோடு அங்கிருந்தபோது இரண்டு கதைகளை தயார் பண்ணி விட்டாராம். ஆனால் அவர் சென்னை வந்தபிறகு இந்த கதை எழுதிய விவரம் பற்றியும் சொன்னார்.
இப்போது அந்த கதைகளை ஹிந்தி இயக்குனர் ஒருவரிடம் ரகுமான் கூறியிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. விரைவில் தொடங்கவிருக்கும் அந்த இரண்டு படங்களுக்குமே ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறாராம்.
அதோடு, படம் ஹிந்தியில் தயாரானபோதும், தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட உள்ளதாம்.

0 comments :
Post a Comment