தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த தாய் கைது செய்யப்பட்டார்.

னடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

New Brunswick என்ற பகுதியை சேர்ந்த பெண்,கடந்த 2009 ஆம் ஆண்டில் தன்னுடைய குழந்தையை snowbank என்ற இடத்தில் உயிரோடு புதைத்ததாக வந்த தகவலை அடுத்து,அந்த இடத்தை தோண்டி, குழந்தையின் பிணத்தை கைப்பற்றி சோதனை செய்யப்பட்டது.

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் தன்னுடைய குழந்தையை உயிரோடு புதைத்ததை ஒப்புக்கொண்டார். அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவரை Moncton provincial court என்ற நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். மீண்டும் மே மாதம் 21ஆம் திகதி ஆஜர்படுத்துமாறும் அதுவரை காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குழந்தை எந்த காரணத்திற்காக உயிரோடு புதைத்தார், குழந்தையின் பின்னணி என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :