பாமுனையில் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.

ட்டாளைச்சேனை, பாமுனை பிரதேசத்தில் 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு பாலமுனை 3ஆம் பிரிவைச் சேர்ந்த 21 வயதுடைய பார்த்திமா பர்வின் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் சனிக்கிழமை இரவு வீட்டில் ஏற்பட்ட வாய்த் தர்கத்தையடுத்து, வீட்டிலிருந்து வெளியேறி பெரிய தகப்பனார் வீட்டிற்குச் சென்று இரவு தங்குவதற்கு அனுமதிகேட்டு அறையில் நித்திரைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் கணவன் இரவு 10.20 மணிக்கு மனைவியை தேடி பெரிய தகப்பனார் வீட்டிற்குச் சென்று அறைக்குச் சென்றபோது அறையின் கூரையில் அப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.

பின்னர் கல்முனை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணிற்கு திருமணமாகி 10 மாதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :