
இன்று (மே) 28 ம் திகதி கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. குறித்த அந்நேரத்தில் செங்குத்தாக உள்ள ஒரு பொருளுக்கு ஏற்படும் நிழலினூடாக சூரியனை முன்னோக்குவது சரியாக கஃபாவையே முன்னோக்குவதாக அமையும்.
ஆகவே, சரியான கிப்லாவை அறிந்து கொள்வதற்கு நேரகாலத்துடன் நேர்த்தியான ஒரு தடியை 90 பாகையில் (அதாவது பூமிக்கும் அந்தத் தடிக்குமிடையிலான கோணம் செங்கோணமாக இருக்கும் விதத்தில்) நாட்டுவதுடன் பிரயோகிக்கும் கடிகாரத்தின் நேரத்தையும் சரி செய்து கொள்ளவேண்டும். பின்னர் குறித்த நேரத்தில் சூரியனின் மூலம் அந்தத் தடிக்கு ஏற்படும் நிழலின் மீது கோடிட்டுக் கொள்ளவேண்டும். பிறகு அக்கோட்டினூடாக தடியை நோக்கும் திசையையே கிப்லாவாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
சூரியன் மக்காவை உச்சங்கொடுக்கும் இன்றைய தினத்தில் தங்களது மஸ்ஜிதுகள், வீடுகள் மற்றும் தேவையான இடங்களுக்கான சரியான கிப்லாவுடைய திசையை அறிந்து கொள்ள மேல் குறிப்பிட்டவாறு செய்துகொள்ளும்படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு கேட்டுக்கொள்கிறது.
0 comments :
Post a Comment