மகிழவட்டுவான் கல்குடா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான விஜயகுமார் தீபா (வயது 20) என்பவரே நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளார்.
வீடொன்றினுள் சடலமொன்று காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அவ்வீட்டிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் கட்டார் நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக தொழில் செய்பவரென உறவினர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத்பண்டார விஜேசுந்தர தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர்.
இவரது சடலம் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment