மாணவிகள் 11 பேரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரிய ஆசாமி கைது.


ல்கிரியாகம பிரதேச பாடசாலையொன்றின் 4ம் வகுப்பு மாணவிகள் 11 பேரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் இன்று (11) நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். 

குறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஆசிரியர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நேற்று (10) மாலை கல்கிரியாகம பொலிஸில் சரணடைந்துள்ளார். 

பாடசாலை முடிந்ததும் மாலை வகுப்பு எனக்கூறி தனது வகுப்பறையில் வைத்து குறித்த ஆசிரியர் மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். 

இந்த விடயம் குறித்து வெளியில் யாருக்கும் சொல்லக்கூடாதென ஆசிரியர் மாணவிகளை மிரட்டியும் வந்துள்ளார். 

மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவி ஒருவரின் வெள்ளை சட்டையில் இரத்தக்கரை காணப்பட்டுள்ளது. 

இதனை அவதானித்த தாய் அவரிடம் கேள்வி எழுப்பியதை அடுத்து உண்மை அம்பலமாகியது. 

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது. 

இந்த நாசகார சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது. 

நீண்ட காலமாக இவர் மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :