திவிநெகும சித்திரை புத்தாண்டு சேமிப்பு வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சமுர்த்தி வங்கியில் சிறுவர் மற்றும் சேமிப்பு வைப்புக் கணக்குகள் இன்று 2013.04.14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இன்றைய தினம் சமுர்த்தி பயனாளிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கணக்கின் கணக்காளர்களை ஊக்குவிக்கும் முகமாக ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பரிசில்களை அட்டாளைச்சேனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.எம்.ஹமீட், வலய உதவி முகாமையாளர் எ.ஜே.எம்.அனீஸ் வங்கி உதவி முகாமையாளர் எம்.ஏ.எல்.றிஸ்வான் சமுர்த்தி உத்தியோகத்தர் ஐ.றுமைஸா ஆகியோரினால் இந்த ஊக்குவிப்பு பரிசில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர்களினால் அறவீடு செய்யப்பட்ட பெரும் தொகையான பணமும் இன்றைய தினம் வைப்புச் செய்யப்பட்டமையும் குறிப்பித்தக்கது.
0 comments :
Post a Comment