இதயத்தினுள் ஒருத்தி -ஏ.ஜே.தானிஸ்

இதயத்தினுள் ஒருத்தி
என் அவளுக்காய
இதயச் சுமைகளை
இறக்கி வைக்கும்
செயற்கை இதம்தான்
இவ் ஏடு.


காதல் வளர கண்ணீர்
வடித்தேன் காகிதத்தில்
என்னை வரைந்தேன்
காற்றில் பறக்கவிட்டு
கை காட்டி சென்றவளே


மனசால நேசித்து
கண்ணால சுமக்கவைத்து
என் துக்கத்தை
கொன்டவளே


என்ன பாவம் செய்தேன்
நான்
உன்னை காதலித்ததை
தவிர
நான் கவிஞனும்
அல்ல
நல்ல கலைஞனும்
அல்ல


உன்னை கண்டதும்
கண்ணில் வடிந்த
காவியம்தான்
இவ் ஏடு


உன் பெயரை
கல்லில் செதுக்கியும்
கலைந்து போனதடி
அதை மாற்றி என்
இதயத்தில் எழுதியதும்
இன்னமும் துடிக்குதடி


எல்லோரும் என்னை
திட்டுகின்றார்கள்
இரக்கம் இல்லாதவன் என்று
என்ன தெரியும்
இவர்களுக்கு அது


உனக்கு மட்டும்தான் என்று
என்னவளே உன் இதயத்தில்
ஓர் இடம் கொடு
ஓரத்தில் ஒதுங்கி
ஒரு நிமிடமாவது
அமரந்திருக்க அது போதும்


நான் வாழும் காலமெல்லாம்
சிறகடிக்க
என்னவளே உன்னவன்
கைபிடிக்கும் போது
எனக்குமோர் சேதி
சொல்லி அனுப்பு
காத்திருக்கின்றேன்.


AJ தானிஸ்  ஸாக்கிறாஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :