அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு விஷம் தடவப்பட்ட கடிதம்.


மெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு விஷம் தடவப்பட்ட கடிதம் வந்தபடி உள்ளது. மிசிசிபியை சேர்ந்த ரோஜர்வில்சன் என்ற செனட் உறுப்பினருக்கு விஷம் தடவப்பட்ட கடிதம் வந்தது. அதில் ரெசின் என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருந்தது.

அதேபோன்ற கடிதம் அதிபர் ஒபாமாவுக்கும் மிசிசிபியை சேர்ந்த நீதிபதி ஒருவருக்கும் வந்தது. இவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதை யார் அனுப்பியது என்று விசாரித்ததில் முக்கிய தகவல் கிடைத்தன.

மிசிசிபி அருகே உள்ள கோரிந்த் என்ற இடத்தில் இருந்து கடிதம் அனுப்பபட்டடிருப்பது தெரிய வந்தது. அதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் யார் என்ற விபரத்தையும், மற்ற தகவலையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். இது தீவிரவாத செயலாக இருக்குமா? என்பது பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை.

மாலைமலர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :