நாட்டுக்கெதிராக செயல்பட யாருக்கும் இடமளிக்கப் படமாட்டாது-ஜனாதிபதி


தாய் நாட்டிற்கு எதிராக செயற்படுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பனாகொடை இராணுவ முகாமில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் 30 வருடகால யுத்தம் காணப்பட்ட போதிலும் நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையான பல விடயங்கள் வெளிநாடுகளிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி கூறினார்.

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இந்த விவகாரம் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, குறித்த துறைகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பைப் போன்று தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் யுகமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

அவ்வாறான யுகம் உருவாகும் போது நாடு முழு சுதந்திரம் பெறும் எனவும் அதற்கு எதிராக எவரும் செயற்பட இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :