மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மோட்டார் வாகன பதிவு கட்டணத்தை அதிகரிக்க மாகாண ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிச்சந்திர தெரிவித்தார்.இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2013 வரவு - செலவு திட்டத்தின்படி மோட்டார் வாகன ஆதாய பத்திர கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த கட்டண உயர்வு மேல் மாகாணத்தில் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக மேல் மாகாண போக்குவரத்து ஆணையாளர் சாந்த குமார முகந்திரம் தெரிவித்தார்.
நிதி அமைச்சு இது குறித்து தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.AD
0 comments :
Post a Comment