ஜெய்லானி பள்ளிவாசல் மீது கைவைக்கும் பட்சத்தில் அரசாங்கம் 40 நாட்களுக்குள் அழிவடையும் என முன்னாள் கொழும்பு மா நகர சபையின் பிரதி மேயர் அஸாத் சாலி சவால் விடுத்துள்ளார்.இன்று காலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மிக விரைவில் கூரகல, ஜெய்லானி பிரதேசத்தில் தொல்பொருள் அகழ்வுப்பணிகளை தொல்பொருள் திணைக்களம் ஆரம்பிக்க போவதாக செய்திகள் வெளியான நிலையிலேயே அஸாத் சாலி மேற்படி தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்த்கின் தொல்பொருள் அகழ்வுப்பணிகளின் போது முஸ்லிம்களின் வழிபாட்டுக்கு குந்தகம் விளைவிக்கப்படாது என பாதுகாப்பு செயலாளர் உத்தரவாதம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.VV
0 comments :
Post a Comment