பாஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் குண்டு வைத்த இருவரில் ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். 2வது நபரான 19 வயதாகும் ட்சோகர் ட்சர்னயேவ் 9 (Dzhokhar Tsarnaev) ஐ வலைவீசி தேடி வந்தனர்.
இந் நிலையில் நேற்று இரவு (19.04) உலங்கு வானூர்திகள், கனரக ஆயுதங்கள் தாங்கிய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உதவியுடன் Dzhokhar Tsarnaev ஐ கைது செய்துள்ளதாக பொலீசார் அறிவித்துள்ளனர்.
Boston பகுதியில் உள்ள backyard பகுதியில் இருந்த படகு ஒன்றினுள் Dzhokhar Tsarnaev அளிந்திருந்த நிலையில் பொலீசாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குண்டுவெடிப்பு சூத்திரதாரிகள் இருவரும் ரஸ்யர்கள் என்பதும், கடந்த 2002 இல் இருந்து அமெரிக்காவில் வசித்துவந்ததாகவும் தெரியவந்துள்ளது.
Dzhokhar Tsarnaev கைதானதை தொடர்ந்து, அங்கு குழுமியிருந்த அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.



0 comments :
Post a Comment