ஒலுவிலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களில் 39 ஆண்கள், 18 பெண்கள், 40 சிறுவர்கள். படங்கள் இணைப்பு.



சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த 97 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 97 பேர் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இவர்கள் இன்று (27) அதிகாலை அம்பாறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டவர்களிடம் தற்போது விசாரணை இடம்பெற்று வருகிறது. 

கைது செய்யப்பட்டவர்களில் 39 ஆண்கள், 18 பெண்கள் மற்றும் 40 சிறுவர்கள் அடங்குவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டோர் தற்போது ஒலுவில் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். AD




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :