இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை.


வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தின் போது (1971) அவர் செய்ததாகக் கூறப்படும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு இந்தத்தண்டனை வழங்கப்பட்டது.

மனிதப் படுகொலை, சித்ரவதைகள் ஆகியவைகள் உட்பட பல குற்றங்களுக்காக ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் உபதலைவரான டெல்வார் ஹொசைன் சைதீ அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் என்று விமர்சகர்களால் கூறப்படும் இந்த விசாரணை மன்றத்தின் மூலம் ஒரு மூத்த தலைவருக்கு வழங்கப்பட்ட மிகக்கூடிய தண்டனை இதுவாகும்.

இந்த வழக்குக்கு எதிராக பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜமாத் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த மோதல்களில் பலர் காயமடைந்தனர். (பி.பி.சி )
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :