SLMC முன்வைக்கும் திருத்தங்களை அரசு ஏற்றுக்கொண்டால் திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளிப்போம் - ஹஸன் அலி


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கும் திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பெதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதைத்தீர்மானிக்கும் மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கட்சியின் உயர்பீடமான தாருஸ்ஸலாத்தில் நேற்று மாலை 5.30 மணியிலிருந்து இரவு 10.30 மணிவரைத்தொடர்ந்தது. இக்கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக மு.கா.வின் செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஹஸனலி எம்.பி.மேலும் தெரிவிக்கையில், திவிநெகும சட்டமூலம் தொடர்பில் மு.கா.முன்வைக்கும் தீர்மானங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கவுள்ளோம். எவ்வகையான திருத்தங்களை முன்வைப்பது தொடர்பில் நாளை (இன்று) கூடி ஆராயவுள்ளோம். நாளைய கூட்டத்தில் (இன்று) தீர்மானிக்கும் திருத்தங்கள் சம்பந்தமாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்க தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :