(எம்.பைஷல் இஸ்மாயில், எஸ்.எம்.அறூஸ், ஏ.எல்.றமீஸ்)
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீரின் அலுவலகக் காரியாலயம் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நேற்று 2013.01.17 ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹசனலி, மற்றும் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்ட திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், மாகானசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் இவர்களுடன் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பிரதித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஐ.எல்.அப்துல் மனாப் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



0 comments :
Post a Comment