GCE O/L ஆள் மாராட்டம் செய்து (குதிரை) பரீட்சை எழுதியவர் கைது

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் மோசடி செய்த ஒருவர் நேற்று அம்பிலிபிட்டிய துன்கம மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார். 

நேற்றுக்காலை 9.15 மணியளவில் பரீட்சைத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின்படி மேற்படி பரீட்சை மண்டபத்தில் அடையாள அட்டையில் பெயர் மாற்றம் செய்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்த நபர் நேற்றுக்காலை 10.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட நபர் உடனடியாக குட்டிகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த பரீட்சாத்திக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவருக்கெதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

சில வேளைகளில் குறித்த பரீட்சார்த்திக்கு ஆயுள் முழுவதும் எதுவித பரீட்சைக்கும் தோற்றமுடியாதவாறு தடைசெய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பரீட்சை மோசடிகள் இடம்பெறும் இடங்களிலிருந்து நேரடியாக பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு எந்நேரமும் அறியத்தர முடியும் என்றும் பரீட்சை ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :