வவுனியா மாவட்டத்தில் சகல பிரதேசங்களும் எவ்வித பாகுபாடுகளுமின்றி அபிவிருத்தி

வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் விருப்பத்தின்படியே தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் அவர்களை புறந்தள்ளி எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாது எனவும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வன்னி வசந்தம் என்னும் த
ொனிப் பொருளில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன்,சிவசக்தி ஆனந்தன் உட்பட மாகாண அமைச்சின் செயலாளர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள்,மக்கள் பிரதி நிதிகள் ஆகியோர் இதன் போது சமூகமளித்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் சகல பிரதேசங்களும், எவ்வித பாகுபாடுகளுமின்றி அபிவிருத்தி செய்யப்படுகின்றன.இதில் இனம்.மதம்,பார்ப்பதில்லை,எங்கு தேவை இருக்கின்றதோ அங்கு முன்னுரிமைப்படுத்தி அபிவிருத்திகளை செய்கின்றோம்.

பிரதேசத்தில் அபிவிருத்திகளை செய்கின்ற போது மக்களின் தேவைக்கு முன்னுரிமையளித்து சகல மக்கள் பிரதி நிதிகளின் கருத்துக்களையும் உள்வாங்கி திட்டங்களை தயாரிக்க வேண்டும். இந்த மாவட்டம் இன்று அமைதியாக காணப்படுகின்றது.

ஆனால் சிலருக்கு மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க தேவையாகவுள்ளது. அதற்கு இடம் கொடுக்கமுடியாது.

இந்த நாட்டின் ஜனாதிபதி தான் வன்னி மாவட்டத்துக்கான நிதிகளை நாம் கேட்கின்ற போதெல்லாம் ஒதுக்கித்தருகின்றார் என்பதை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இம்மாவட்டத்தின் மின்சாரம்,சுகாதாரம்,பாதை,கல்வி,மக்களின் வாழ்வாதார திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நாம் நிதிகளை வழங்கி மாவட்டத்தை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்கின்றோம்.

எனவே சகலரும் மக்களுக்கான இந்த அபிவிருத்திகளை முன்னெடுக்க உதவிகளை வழங்குங்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.

வவுனியா மாவட்ட பாடசாலைகளில் காணப்படும் ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையினை நிவர்த்திக் உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு இங்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :