வாகரை மக்களுக்கு யோகேஸ்வரன் எம்.பி தலைமையில் வெள்ள நிவாரண விநியோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் வாழும் மக்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் அவசர உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக வழங்கியுள்ளது.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. பாய், வெற்சீற், சிறுவர்களு...க்கான அங்கர் பால்மா போன்றவை இவ்வமைப்பால் வழங்கப்பட்டன. மற்றும் சேலைகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் வழங்கப்பட்டது.
இவ் உதவிகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் பேரவை குழுவினர் வழங்கினர்.
வாகரைப் பிரதேசத்தில் உள்ள ஊரியன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் உள்ள 35 குடும்பங்களுக்கு பாய் எழுபது, வெற்சீற் முப்பத்தைந்து, பால்மா முப்பத்தைந்து, ஊரியன்கட்டு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் உள்ள 16 குடும்பங்களுக்கு பாய் முப்பதிரண்டு, பால்மா பதினாறு, வெற்சீற் பதினாறு, வாகரை அழகாபுரி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் உள்ள 29 குடும்பங்களுக்கு பாய் ஐம்பத்தி எட்டு, பால்மா இருபத்தொன்பது, வெற்சீற் இருபத்தொன்பது மற்றும் தட்டுமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள 141 குடும்பங்களுக்கு பாய் இருநூற்று எண்பத்திரண்டு, பால்மா நூற்றி நாற்பத்தி ஒன்று, வெற்சீற் நூற்றி நாற்பத்தி ஒன்று என்பன இவர்களால் வழங்கப்பட்டது.
மேற்தரப்பட்ட உதவிகளுக்காக அகில இலங்கை இந்து மாமன்றம் இரண்டு இலட்சம் ரூபாய் நிதியை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைக்கு வழங்கியிருந்தது. இவ்உதவியை புரிந்த அகில இலங்கை இந்து மாமன்றத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும், மட்டக்களப்பு மாவட்ட மக்களும் நன்றியை தெரிவிக்கின்றனர்.

இவ்வேளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மூலம் ஊரியன்கட்டு, கதிரவெளி ஆகிய கிராம இடைத்தங்கல் முகாம்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டது. அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு 400 பாண் உதவியையும் அவசரமாக வழங்கியது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :