துப்பாக்கிகளுடன் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர்:

Share on

சீனாவில் பல்கலைகழக ஆசிரியர் ஒருவர், 30 இயந்திர துப்பாக்கிகளுடன் வகுப்பறைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவின் நான்ஜிங் பல்கலைகழகத்தின் அறிவியல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் வூ.
இவர் கடந்த வாரம் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். 30 துப்பாக்கிகளுடன் இவர் வகுப்பறைக்கு வந்ததை கண்ட மாணவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

ஆயுதம் குறித்த வகுப்பு என்பதால், மாணவர்களுக்கு நேரிடை பயிற்சி அளிப்பதற்காக இவர் துப்பாக்கிகளை எடுத்து வந்துள்ளார். இந்த துப்பாக்கிகளை மாணவர்கள் தனி தனியாக கழற்றி மீண்டும் ஒன்று சேர்த்தனர்.
இது குறித்து பல்கலை கழக நிர்வாகிகள் குறிப்பிடுகையில், பொலிசாரின் அனுமதியுடன் தான், இந்த துப்பாக்கிகள் வகுப்பறைக்கு எடுத்து வரப்பட்டன.
வகுப்பறைக்கு வெளியே இந்த துப்பாக்கிகளை பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை. தீவிர கண்காணிப்புடன் தான் இந்த வகுப்பு நடத்தப்பட்டது என்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :