Share on
பாணந்துறை கடலில் குளிக்கச் சென்ற தேரரை காணவில்லை என்றும் அவரை காப்பாற்றுவதற்காக சென்ற படகும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தல்ருவ கல்வெட்டே மோதர விஹாரையிலுள்ள தேரரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஹாரையின் பின்னால் உள்ள கடலிலேயே அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்று காணாமல் போயுள்ளார்.
சம்பவத்தை கேள்வியுற்று கடலுக்குள் விரைந்து சென்ற படகொன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை தேடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment