தீவிரவாதி என அவதூறு செய்தி வெளியிட்ட கூகுள் நஷ்டஈடு செலுத்தபோகிறது

Share on
தீவிரவாதி என அவதூறாக செய்தி வெளியிட்டதால் வாலிபருக்கு ‘கூகுள்’ நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் மிலோரத் டிரிகுல்ஜா. இவர் கேளிக்கை மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவருக்கு மெல்போர்ன் நகரில் உள்ள தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு ‘கூகுள்
’ இணைய தள நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதனால் அவரது தொழில் முடங்கியது.


இதை எதிர்த்து அவர் விக்டோரியாவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடைபெற்றபோது, ஏதோ தவறுதலாக இது போன்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இது வெளியிடப்படவில்லை என கூகுள் நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் அதை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மறுத்து விட்டார். அவதூறு செய்தி வெளியிட்டதற்காக மிலோரட் டிரிகுல் ஜாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தர விட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :