Share on
மகப்பேற்று மற்றும் மகளிர் நோய் மருத்துவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கர்ப்பமான பெண்களை பரிசோதித்த மேசன் (கொல்லத்து காரர்) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கராபிட்டி வைத்தியசாலையில் இருந்து வரும் வைத்தியர் என தன்னைக்கூறிக் கொண்டு வீடுகளுக்குச் சென்று கர்ப்பமடைந்த பெண்கள் மற்றும் யுவதிகளை இவர் பரிசோதித்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மொரவக்க - வெலிகே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மேசன் ஆவார்.
காதல் புரிந்து வல்லுறவு செய்யப்பட்ட யுவதி ஒருவரை பரிசோதித்துக் கொண்டிருந்த வேளை குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் குறித்து விசாரணை நடத்தியபோது வைத்தியர் என்பதற்கான எவ்வித சான்றுகளும் இவரிடம் இருக்கவில்லை.
எனினும் சந்தேகநபர் ஒருவகை மனநோயாளியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment