கிழக்கு மாகாண கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: கல்வி அமைச்சர்

Share on
தயட்ட கிருள்ள தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் கல்வித் துறைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அதிகளவிளான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன் மூலம் கூடுதலான அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இது இந்த மாகாணத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்ட தேசிய பாடசாலையான டீ.எஸ். சேனாநாயக்கா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற அதிபர்கள், ஆசியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சகவாழ்வு நற்புறவு சந்திப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொலைத்தொடர்பு அமைச்சரும் தயட்ட கிருள்ள திட்டத்தின் தலைவருமான ரஞசித் சியம்பலாபிட்டிய தலைமையில் இடம்பெற்ற் இந்நிகழ்வில்; கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசானாயக, அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, பி.எச். பியசேன, ஸ்ரீறியானி விஜய விக்ரம,  மாவட்ட செயலாளர் நீல் டீ அல்விஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின்  கலை கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களின் நட்புறவை வலுப்படுத்தும் முகமாக பாடசாலைக்கு இசைக்கருவிகளும் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :