சிங்களப் பெண்களே..! அதிக குழந்தைகளைப் பெற்றெடுங்கள்:- மேர்வின்

Share on
சிங்களப் பெண்களிடம் அதிகளவான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களான சிங்களப் பெண்களிடம் இந்தக் கோரிக்கையை நான் விடுத்துள்ளேன். கூடுதலான பிள்ளைகளை பெற்றெடுக்குமாறு நான் கோரியுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எனது மகனுக்கும் லம்போகினி கார் வாங்கிக் கொடுப்பேன். எனது மகன் லம்போகினி காரை விரும்பினால் அதனை நான் வாங்கிக் கொடுப்பேன்.

கிரிக்கெட் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஏன் மோட்டார் கார் பந்தயக்காரர்களுக்கு சலுகைகளை வழங்க முடியாது.

பந்தயக் கார்கள் மட்டுமன்றி, பந்தய விமானங்களை செலுத்தக் கூடியவர்கள் இருந்தால் அவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்டம் பல்வேறு நலன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நானும் பந்தயக் கார் செலுத்துவேன், என்னுடன் எவரேனும் மோத விரும்பினால் மோதலாம் என அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :