சல்மா அமீர் ஹம்சா விடுத்துள்ள இஸ்லாமிய புதுவருட முஹர்ரம் செய்தி

Share on

பிறந்துள்ள 1434 இஸ்லாமிய புதுவருடத்தில் நம் அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும் அவனது கிருபையம் கிடைக்க பிராத்திப்போமாக என  காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் பணிப்பாளருமான சல்மா அமீர் ஹம்சா விடுத்துள்ள இஸ்லாமிய புதுவருட முஹர்றம் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் அச்செய்தியில் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது கடந்த வருடத்தில் செய்தவற்றை நாம் ஒரு முறை மீட்டிப்பார்க்க வேண்டும்.

இஸ்லாமிய புதுவருடத்தில் நமக்கு இஸ்லாம் காட்டும் வழியை பின்பற்றி அவற்றை பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக இந்த மாதத்தில் ஆசுறா நோன்பு நபி பெருமானார்(ஸல்)அவர்கள் கூறிய சுன்னத்தான வணக்கமாகும் அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

மற்றவர்கள் மீது பொறாமை கொள்வதும் மற்றவர்களை தூசிப்பதும் மற்றவர்களின் முன்னேற்றத்தை தடுப்பதும், மற்றவர்களின் உள்ளத்தை புண்படுத்துவதும் ஒரு முஸ்லிமின் பன்பாக இருக்க முடியாது இவற்றையெல்லாம் களைந்து நாம் மற்றவர்களுடன் ஒற்றுமையை பேணி நடக்க நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக அல்லாஹ் நமது தூய பணிகளை பொருந்திக்கொள்வானாக என சல்மா ஹம்சா விடுத்துள்ள இஸ்லாமிய புதுவருட முஹர்ரம் செய்தியில் மேலும்  தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :