Share on
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த கடுகதி ரயில் முன் விழுந்து சிறுவனும் சிறுமியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அலவ்வ - வலக்கும்பர பிரதேசத்தில் இன்று (23) காலை 7.15 அளவில் இடம்பெற்றுள்ளது.
17 வயதுடைய சிறுவனும் சிறுமியுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இரு சடலங்களும் அலவ்வ ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment