திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் யாழ். கதிர்காம யாத்திரீகர்கள். சல்லியிலிருந்து கடலில் பயணித்தனர்!



வி.ரி.சகாதேவராஜா-
யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த ஆறாம் தேதி புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான யாழ். கதிர்காம பாதயாத்திரைக்குழு நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர்.

காலையில் சாம்பல் தீவு சல்லியம்மன் ஆலயத்தை தரிசித்து விட்டு கடல் மார்க்கமாக திருமலை நகரை அடைந்தனர்.

கடல் மார்க்கமாக இயந்திரப்படகு மூலம் திருமலை மூன்றாம் கட்டையை வந்தடைந்தனர். எலவே இவர்கள் புல்மோட்டை பிரதேசத்திலும் கடல் மார்க்கமாக பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜெயா வேல்சாமி தலைமையிலான குழுவினர் 17 ஆவது நாளான நேற்று திருகோணேஸ்வரர் ஆலயத்தை தரிசித்து அங்கு பகல் போசனத்தையும் நிறைவு செய்தனர். நேற்று மாலை அவர்கள் வில்லூன்றி கந்தசாமி கோயிலில் தரித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :