குடிநீர் இன்றித் தவித்த 58 ஆசாத் நகர் மக்களுக்கு குடிநீர் கிடைத்தது



ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட_ மூதூர் 58 ஆசாத் நகர் மக்களின் நீண்ட கால குடிநீர் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

58 ஆசாத் நகர் மக்கள் குடிநீர் இன்மையால் மிக நீண்ட காலம் பல சொல்லொனா இன்னல்களை எதிர் கொண்டு வந்தனர்.கிணறுகளின் மூலம் கிடைக்கும் குடி நீரும் பாவணைக்கு உதவாததாக இருந்து வந்தது.இது தொடர்பில் இப் பிரதேச மக்கள் பல அரசியற் தலைமைகளிடமும் பல கோரிக்கைகள் முன்வைத்தும் தீர்வு கிடைக்கவில்லை.அண்மையில் குடி நீர் பிரச்சினை தொடர்பில் இக் கிராம மக்களின் கோரிக்கை ஊடகங்களிலும் பேசப்பட்டது.

இதனால் அப்பிரதேச மக்கள் நம்பிக்கையீனத்துடன் இருந்த வேளையிலேயே ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மகளிர் அமைப்பாளர் றைஷா மகறூப்பிடம் தங்களது பிரச்சினையை முன்வைத்தனர்.
மக்களின் பிரச்சினையை அறிந்த உடனேயே நடவடிக்கை மேற்கொண்ட மகளிர் அமைப்பாளர் றைஷா மகறூப் 58 ஆசாத் நகர் மக்களுக்கான குடிநீர்த் தேவையை நிறைவு செய்து வைத்தார்.

58 ஆசாத் நகர் மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கான குழாய்கள் பொறுத்தும் நடவடிக்கையில் நேற்று(19) பொதுமக்களுடன் இணைந்து றைஷா மகறூப் அவர்களும் ஈடுபட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :