மான்களுக்கு உணவு அளித்துப் பாதுகாப்போம்



திருகோணமலையில் பிட்டெரிக் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள மான்கள் சரணாலயத்தில் வாழும் மான்களுக்கும், தற்சமயம் “கோவிட் பயனத்தடை “ காரணமாக மேலதிகமாக உணவு தேடி திருகோணமலை வீதிகளில் அலைந்து திரிவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றது.

கடந்த சில வருடங்களாக இவ் மான்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் உணவு அளிக்கப் பட்டு வந்தது.

பயனத்தடையின் காரணமாக உணவு அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. தற்சமயம் அரசிடம் விசேட அனுமதி பெற்று உணவு அளிக்கும் செயல்பாடு மீண்டும் தொடங்கியுள்ளது. ரோட்டரி கழகத்தின் சார்பில் திரு மருது அவர்கள் இச் செயல்பாட்டை நடைமுறை படுத்துகிறார்.

திருகோணமலையில் வாழும் மற்றும் இங்கு வரும் மக்கள், தங்களால் முடிந்தளவு மான்கள் சரணாலயத்துக்கு நேரில் சென்று உணவு அளித்து எங்கள் மண்ணில் வாழும் இவ் அரிய உயிரினத்தைப் பாதுகாப்போம்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :