இளம் கவிதாயினி மருதமுனை எம்.ஐ.ஹைறுன்னிஸா “கலைஞர் சுவதம் விருது”பெற்றார்.



பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனையைச் சேர்ந்த இளம் கவிதாயினி எம்.ஐ.ஹைறுன்னிஸா “கலைஞர் சுவதம் விருது”பெற்றார்.கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில்; அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஊடாக கல்முனை பிதேச செயலக கலாச்சார அதிகார சபையின் ஏற்பாட்டில் புதன் கிழமை(24-02-2021)பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற “கலைஞர் சுவதம் விருது” வழங்கும் நிகழ்வின் போதே இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மருதமுனையின் கலை,இலக்கியத் தளத்தில் தடம் பதித்துவரும் புதிய எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் கவிதை,கட்டுரை,சிறுகதை என்பவற்றைப் பத்திரிகைகளுக்கு எழுதிவருகின்றார்.எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இதழியல் கற்கை நெறியை கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :