குறித்த நிகழ்வானது தம்பலகாமம் பிரதேச சபையின் உறுப்பினர் வி.குமார் தலைமையில் இன்று (16) இடம் பெற்றது. தம்பலகாமம் பட்டிமேடு எனும் இடத்தை சேர்ந்த சின்னத்துறை சிவராசா அவர்களின் நினைவாக குறித்த நிழற்குடை அமைத்து திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச சபை உறுப்பினர் குமார் அவர்களின் அயராத முயற்சியினால் இது திறந்து வைக்கப்பட்டது. தனது குடும்ப உறுப்பினர்கள் இதில் பங்கேற்றதோடு சுமார் 50 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன. இதில் பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி, தம்பலகாமம் பிரதேச சபையின் உறுப்பினர் வீ.குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment