தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியில் பஸ் தரிப்பிடத்துக்கான நிழற் குடை திறந்து வைக்கப்பட்டது.



ஹஸ்பர் ஏ ஹலீம்-
குறித்த நிகழ்வானது தம்பலகாமம் பிரதேச சபையின் உறுப்பினர் வி.குமார் தலைமையில் இன்று (16) இடம் பெற்றது. தம்பலகாமம் பட்டிமேடு எனும் இடத்தை சேர்ந்த சின்னத்துறை சிவராசா அவர்களின் நினைவாக குறித்த நிழற்குடை அமைத்து திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர் குமார் அவர்களின் அயராத முயற்சியினால் இது திறந்து வைக்கப்பட்டது. தனது குடும்ப உறுப்பினர்கள் இதில் பங்கேற்றதோடு சுமார் 50 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன. இதில் பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி, தம்பலகாமம் பிரதேச சபையின் உறுப்பினர் வீ.குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :