கல்முனை மாநகர சபையின் 35 வது கூட்டம் 2021.02.24 ஆம் திகதி புதன் கிழமை நடைபெற்றது. இவ் அமர்வில் கௌரவ கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்.
கல்முனை மாநகர சபைக்கு சேவைபெறும் நிமிர்த்தம் வருகின்ற பொதுமக்களுக்கு அவர்களது தேவைகளை விரைவாகவும் நேர்த்தியாகவும் வழங்கவேண்டும் என்பதோடு சேவைகள் அனைத்தும் முறையாக வழங்கப்படுகின்றதா என்பதை பரிசீலனை செய்வதற்கு உள்ளக நடைமுறை பரிசீலனை குழு (Internal Quality audit Committee) ஒன்றினை இஸ்தாபித்து அக்குழுவின் ஊடாக மாநகரசபையினால் வழங்கப்படும் சேவை சிக்கல்களை உடனே தீர்த்துவைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைய இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகர பொதுவசதிகள் குழு தவிசாளர் கௌரவ ஹென்றி மகேந்திரன் மற்றும் சபை முதல்வர் உறுதி வழங்கினர்.
0 comments :
Post a Comment