ஐந்து வருடகால வீட்டு வேலைகளுக்காக 50,000 சீன நாணயத்தை அப்பெண் பெறவுள்ளார்.
இப் பெண்ணும் குறித்த நபரும் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தனர்.
கடந்த வருடம் விவாகரத்துக்கு மனைவி விண்ணப்பித்தார் முதலில் விவாகரத்துக்கு தயக்கம் தெரிவித்த அப்பெண், பின்னர் தனது கணவனிடமிருந்து இழப்பீடு கோரினார்
வீட்டு வேலைகளிலோ தமது மகனை பராமரிப்பதிலோ கணவன் பங்காற்றவில்லை என மனைவி வாதாடினார்
இவ்வழக்கை விசாரித்த குறித்த நகரத்தின் நீதிமன்றமானது வீட்டில் மனைவி செய்த வேலைக்கக்காக 50,000 சீன நாணயம் (இலங்கை மதிப்பில் சுமார் 15 லட்சம்) வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
அத்துடன் ஜீவனாம்சமாக மாதாந்தம் 2,000 யுபோன் (சுமார் 50,000 இலங்கை ரூபா,) வழங்க வேண்டும் எனவும் சென்னுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது
சீனாவில் இவ்வருடம் முதல் இச்சட்டம் அமுலுக்க வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கும் இந்நிலையில் புதிய சட்ட விதிகளின் கீழ் இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(மெட்ரோநியுஸ்)
0 comments :
Post a Comment