முற்றிலும் இலவசமான கொரியன் அக்யுபஞ்சர் வைத்திய சிகிச்சையுடன் விழிப்புணர்வும்

பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரின் வழிகாட்டலின் கீழ் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.முஹம்மது ரஜீஸ் தலைமையில் இலவச வைத்திய விழிப்புணர்வும், கொரியன் முறை அக்யுபஞ்சர் வைத்திய சேவையும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் நேற்று (05)
இடம்பெற்றது.
இந்த வைத்திய விழிப்புணர்வு நிகழ்வையும், இலவச வைத்திய சிகிச்சையினையும் கல்முனை ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் கிழக்கு மாகாணத்தில் கொரியன் அக்யுபஞ்சர் வைத்திய முறையில் சிறப்பு தேர்ச்சிபெற்ற வைத்தியருமான எம்.வை.இஸ்ஹாகினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வைத்திய சேவையை பெற்றுக்கொள்வதற்காக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர் போன்ற பிரதேசத்திலிருந்து பலர் வருகைதந்தமையும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -