கல்முனை மாநகர முதல்வரின் அறிவிப்பு..

ல்முனை மாநகர சபை எல்லைக்குள் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறை காலத்தில் தனியார் கல்வி நிலையங்களை மூடுவது தொடர்பிலான அறிவிப்பு எதுவும் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களினால் விடுக்கப்படவில்லை.

நாளை திங்கள் (02)மற்றும் நாளை மறுதினம் செவ்வாய் (03)ஆகிய தினங்களில் டியுட்டரி நடத்துனர்களுடன் மாநகர முதல்வர் நடாத்தவுள்ள கலந்துரையாடலின்போதே இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும்.

இது விடயமாக சில இணையத்தளங்களிலும் முகநூல்களிலும் இன்று (01/12/2019)தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து டியுட்டரிகளும் மூடப்பட வேண்டும் என மாநகர முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது என்று மாநகர முதல்வரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -